திங்கள், 26 செப்டம்பர், 2011

கடைசி பக்கங்கள்-எழுத மறந்தவை

Editor page,yellow page மாதிரி இது MY-PAGE
நிறைய படைப் பாளிகள் பிரபல பத்திரிக்கைளில் தங்களின் அணுபவங்களை பகிந்து கொள்கிறார்கள்.தங்களின் விருப்பு வெருப்புக்கள் பழைய பால்ய நினைவுகள் என பல உப்பு சப்பில்லாத விஷயங்களை , சுய புராணங்க்களை, இவர்கள் தாங்கள் எதோ பெரிதாக சாதித்துவிட்ட மாதிரி தான் பெரிய பீடத்தில் இருந்து உலக ஷேமத்தை கருத்தில் கொண்டு மற்ற மானிட பதர்களுக்கு sermon சொல்லும் த்வனியில் எழுதுவதை பார்க்கும் போது கஷ்டமாய் இருக்கிறது.அசோக மித்திரன்,ஆதவன் போன்றவர்களின் படைப்புகள் முதன் முதலில் தனி புத்தக உருவில் வந்தது,அவர்கள் எழுத ஆரம்பித்து நீண்ட நாட்களுக்குப் பின்னர்தான்
ஒரு பக்கம் எழுதியதில் சுஜாதா தான் முன்னோடி என்று நான் நினைக்கிறேன் கணையாழியின் கடைசி பக்கமும் குமுதம் இதழில் வந்த ஒரு பக்கமும் சுவாரஸ்யமாயும் தரமாயும் இருந்தவை.இவைகள் charles Lambஅவர்கள் எழுதிய Essays of Elia (Alpha to the plough-என்ற புனை பெயர்) மாதிரியான உயர் தரத்துடன் இருந்தவை. அவருடைய எழுத்துக்கள் சில சமயம் T.S Eliot-ன் Functions of  Critisim -மை நினவு படுத்தும். லேனா தமிழ் வாணன் அவர்களின் ஒரு பக்கங்களில் தன்னம்பிகை தரும் விஷயங்கள் நிறைய  இருக்கும்
                             .தமிழில் தன்னம்பிகை கட்டுரைகள் முத்த முதலில் எழுதியவர் தமிழ் வாணன் அவர்களாய்த்தான் இருக்க வேண்டும். துணிவே துணை இவரது தாரக மந்திரம் கல்கண்டு வார இதழில் இவர் எழுதிய  மல சிக்கல் இருக்கலாம் ஆனால் மன சிக்கல் இருக்கக் கூடாது போன்றவை மறக்க முடியாதவை.தென்கச்சி சுவாமி நாதன் அவர்களின் தினம் ஒரு தகவல் சுவாரஸ்யம் உள்ள நல்ல விவரங்களை தரும்.மௌனி என்ற ஒரு கதையாசிரியர் இருந்தார் அவரை ஜெய காந்தன் தன்னை கவர்ந்த பெரிய எழுத்தாளர் என கொண்டாடியது எத்தனை பேருக்குத் தெரியும். 1990 களில் தான் அவரது முழ சிறுகதைகளும் பல அறிவு ஜீவிகளின் கடும் முயற்சிகளால் தான் வெளிவந்தது.
                                 திரி லோக சீதாராம் என்ற கவிஞரை நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஞான ரதம் ,காவேரி,கண்ணதாசன் ,சிகரம் ,போன்ற இலக்கிய இதழ்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இவைகளில் எழுதிய பல படைபாளிகள் unsung hero க்கள்.       
ஆனால் இன்று தற் சமயம்-
               ஒரு கவிதை அல்லது கதை தொகுப்பு வெளிவந்ததும் அதை  தொடர்ந்து உடனே ஒரு பாராட்டு விழா ,முக்கால் பக்க விளம்பரம்; அப்புறம் சினிமாவில்சான்ஸ் தேடல்.கிட்டிவிட்டால், எல்லா  TV channel களிலும் பேட்டிதான்.அதுவும் திபாவளி பொங்கல் சமயம் எல்லா சானல் களிலும் திருவிழா தான் .இப்போது விநாயகர் சதுர்த்தி கிருஷ்ண ஜெயந்தி ,காந்தி ஜெயந்தி என் எல்லா தினமும் ஏதாவது ஒரு காரணத்துடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்.
இப்போது எல்லாம் நம்  கோவில்களில் கூட தை வெள்ளி,ஆடிவெள்ளி என்ற விசேஷ நாட்களை தவிர சங்கட சதுர்த்தி,பிரதோஷம்  என பக்தர்களை கவர புது புது தினங்களை அறிமுகம் செய்கிறார்கள். கொண்டாட்ட தினங்கள் பெருகுகின்றது.காரணம் மக்களின் முயற்சி இன்மைதான்.இந்த முயற்சி இன்மைதான் மக்களை பக்தர்கள் ஆக்குகிறது..நம்மை எதாவது ஒரு சக்தி zenith க்கு கொண்டு செல்லாதா என்ற ஆதங்கம் தான்மனிதர்கள் மத்தியில் அதிகம் உள்ளது.
 .இதை உணர்ந்த நம்T V channel களும் எதாவது கொண்டாட்ட தினங்களை ஜனங்களுக்கு தந்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்களும் 24x7ஏதாவது தீனீ போட்டாக வேண்டிய நிர்பந்தம்.
 இதனால் தான் ஒரு பக்க அலுப்பு சுய புராணங்களும்,நித்திரை தரும் தொலை காட்சி நிகழ்ச்சிகளும் நம்மை தாக்கி கொண்டுள்ளன.  இதில் இருந்து தப்ப வழி இல்லை
.Because we are part of the society.
tail piece : --
காதலன்:- நான், உயர ... உயர...  உயர...  உயர ..போகிறேன்
                      நீ யும் வா....
                                                   
காதலி :-   நான், பயந்து ..பயந்து ..சாகிறேன்
                      பதிலை தா .... நல் பதிலை தா ....

  
valaicharam.com